இலங்கையை ஆராயுங்கள்

10 பகல் மற்றும் 9 இரவுகள் கொண்ட இலங்கையை ஆராயுங்கள் என்னும் சுற்றுலா மூலம் இலங்கையின் கலாச்சார அனுபவத்தை நீங்கள் பெறலாம். இச்சுற்றுலா மூலம் இலங்கையின் பல பகுதிகளை நீங்கள் கண்டுகளிக்கலாம்.

Description

Description

இலங்கையில் முக்கிய இடங்களைக் காண விரும்புபவர்களுக்கு இச்சுற்றுலா ஒரு சிறந்த தேர்வாகும்.

நாள் 1: விமான நிலையம் – ஹபரனை

தம்புள்ளை பொற்கோவில் இலங்கையில் உள்ள ஒரு உலக பாரம்பரிய தளமாகும். இது இலங்கையின் மிகப்பெரிய, சிறப்பாகப் பாதுகாக்கப்பட்ட குகை கோயில் வளாகமாகும். சுற்றியுள்ள சமவெளிகளில் இருந்து 160 மீட்டர் உயரத்தில் இந்த கோவில் பாறை உயர்ந்து நிற்கிறது. சுற்றியுள்ள பகுதியில் 80 இற்கும் மேற்பட்ட குகைகள் உள்ளன. ஐந்து குகைகள் முக்கிய இடங்களாக உள்ளன. அவற்றில் சிலைகளும் ஓவியங்களும் உள்ளன. இந்த சிலைகளும் ஓவியங்களும் கௌதம புத்தர் மற்றும் அவரது வாழ்க்கையுடன் தொடர்புடையவை. மொத்தம் 153 புத்தர் சிலைகள், இலங்கை மன்னர்களின் மூன்று சிலைகள், நான்கு கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் சிலைகள் ஆகியன அங்கு உள்ளன.

சிகிரியா என்பது மத்திய மாத்தளை மாவட்டத்தில், தம்புள்ளை நகருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு பழங்கால அரண்மனை ஆகும். பண்டைய இலங்கை நூலான குலவம்சத்தின்படி, இந்த இடம் காசியப்ப மன்னரால் (கிபி 477 – 495) புதிய தலைநகருக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவர் இந்த பாறையின் உச்சியில் தனது அரண்மனையைக் கட்டி அதன் பக்கங்களை வண்ணமயமான ஓவியங்களால் அலங்கரித்தார். இந்தப் பாறையின் பாதிப் பக்கவாட்டில் ஒரு சிறிய பீடபூமியில், ஒரு பெரிய சிங்கத்தின் வடிவத்தில் ஒரு நுழைவாயிலைக் கட்டினார்.

ஹபரனையில் இரவு தங்குதல்.

Additional information

Additional information

நாடு

இலங்கை

நாட்கள்

10

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “இலங்கையை ஆராயுங்கள்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன